Monday, August 20, 2007

காவேரிக் கரையோரம்!!!

(2003-2004 ம் ஆண்டு தஞ்சைப் பகுதியில் நிலவிய வறட்சியால் விவசாயிகளின் துயர் கண்டு எழுதியது)
அன்று

பயிர்களின் அறுவடையால்
நிறைந்தன தாழிகள்
இன்று
உயிர்களின் அறுவடையால்
அறுந்தன தாலிகள்!!
*********************************************

அன்று
உணவிற்காகக் கொடுத்தோம்
பலருக்கு
அடைக்கலம்
இன்று
உணவிற்காகப்
பட்டக் கடனை
எப்படி
அடைக்கலாம்!!
************************************************

அன்று
வேளைக்கு உணவு
இன்று
உணவிற்கு வேலை!!
************************************************

அடுத்த வேளை கஞ்சிக்கு
அண்ணார்ந்துப் பார்த்த
குழந்தையிடம்
"மழை வேண்டி மாரியாத்தாளுக்கு விரதம்
ஒரு வேளைதான்சாப்பிடோனும்"
இல்லாமையால்
சொன்னாள் தாய்!!!
*************************************************
குறிஞ்சியும் ,முல்லையும்
பூத்துக் குலுங்கிய
இந்த மருத நிலத்தில்தான்
பட்டு நெய்தலும்
சிறப்புற்று விளங்கியது
ஆனால் இன்றோ
காவிரி கைவிரித்ததால்

ஆனது பாலை!!!!

6 comments:

Anonymous said...

Imaihalai nanaithu idhayathai pizhiyum unarchimihu 'Paa'kkal(Kavidhai enbadhu Thamizh Chol allavay!) Vazhthukal! valarattum Thamizhpani!!

Rajasekar
(thamizhpavai@yahoo.com)

நாடோடி இலக்கியன் said...

உங்களின் வருகைக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி ராஜசேகர்!!!!

தஞ்சாவூரான் said...

வேதனையான உண்மை வார்த்தைகள்... காவிரி கைவிரித்தாலே நமக்கு சோகம்தான்..

Deepa said...

that was an wonderful poem..

the feelings that was given can never b explained easily..

heart touching one..

congrats for ur work...

continue the same....

அன்புடன் புகாரி said...

========
அன்று
பயிர்களின் அறுவடையால்
நிறைந்தன தாழிகள்
இன்று
உயிர்களின் அறுவடையால்
அறுந்தன தாலிகள்!!
========

வெகு அருமை நாடோடி இலக்கியன். கண்ணீர் பெருக்கெடுக்கும் வரிகள். தஞ்சையை வஞ்சித்தது உலகுக்கே பெரும் பாவம்!

- ஒரத்தநாடு அன்புடன் புகாரி

cheena (சீனா) said...

புகாரியின் பாராட்டுகள் - நன்று நன்று

நெற்களஞ்சியம் தஞ்சையில் வறட்சி - என்ன செய்வது .......

தாழி - தாலி
அடைக்கலம் -அடைக்கலாம்
வேளை - வேலை
குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை

ரசித்தேன் ரசித்தேன் - மகிழ்ந்தேன் -

காவேரிக் கரையோரக் கவலைகள் கவிதையாய் கொட்டுகின்றன