Tuesday, September 16, 2008

உன் தாவணியின் முதல்நாளில்......!

பார்வை படும்
இடத்தில் வளரும்
ஒரு செடியின் அழகு
முதல் பூவைத்
தாங்கும் பொழுது
தெரிவதுபோல ,
பார்த்துப் பழகிய நீ
அழகியானாய்
உன் தாவணியின் முதல்நாளில்......!

இலக்கியத்தில் மட்டுமே
வாழ்ந்து கொண்டிருக்கும்,
அன்னத்திற்கும்,அன்றிலுக்கும்
அவற்றின் இயல்புகளை வைத்து
உருவம் கொடுக்க நினைத்தால் ;
உன் உருவத்திற்கு
இறக்கை முளைக்கிறது.....!