Tuesday, July 24, 2012

கிறுக்கல்கள்-7

புங்கை மரத்தினடியில் 
முந்தைய நாளின் 
பெருமழை வெள்ளம் 
ஓடிய தடங்களில் படிந்திருக்கும் 
மணலின் குளுமையை
அனுபவித்திருக்கின்றீர்களா?
இல்லையென்றால் உங்களுக்கு
முற்றிலும் குளிரூட்டப்பட்ட 
அறைகள் சொர்க்கமாய்த் தெரியக்கூடும்.

கிறுக்கல்கள்-6

இந்த வீட்டில் ,
முன்பு குடியிருந்தவன்
விட்டுச் சென்ற
சில பொருட்களின் ஊடாக
அவனின் வாழ்கையை
நான் கேளாமலேயே என்னிடம் 
சொல்லிக்கொண்டிருக்கிறான்.