Thursday, May 7, 2009

இரண்டு கவிதைகளும்,ஒரு தத்துவமும்.

மௌனங்களில்...
மனிதம் கருதி
மௌனிக்கிறேன்,
எனது மௌனங்களின்

மொழிபெயர்ப்புகளில்
இருப்பதில்லை மனிதம்..!

ரகசியங்களின் ரகசியம்:
"யாரிடமும் சொல்லாதே" என்றே
என்னிலிருந்து
வெளிப்படும் ரகசியம்
என்னிடமே வருகிறது
"யாரிடமும் சொல்லாதே" என்று..!


"உன்னைச் சுற்றி பொய்களிருக்க,

நீ பேசும் உண்மை உன்னை பொய்யனாக்கும்".

மேலே இருப்பது இரண்டும் கவிதை (அதான் மடக்கி மடக்கி எழுதி ஆச்சர்யக்குறி போட்டிருக்கோம்ல).

மூன்றாவதாக இருப்பது தத்துவம் :))