காத்திருப்பேன் உனது வழியில்,
வந்துவிடடி நெஞ்சமோ வலியில்.!
பேசிக்கொள்ளலாம்,
பேசாமல் கொல்லாதே..!
மனதை இழந்தேன் கள்ளியின்பால்,
நீ இல்லையேல் உள்ளதடி கள்ளியின் பால்..!
உன் பிரிவால் நெஞ்சில் மா ரணம்,
இனியும் தொடர்ந்தால் உறுதி என் மரணம்..!
காதலைச் சொல்லவா ரத்தத்தைச் சிந்தி,
பைத்தியமாய் இருக்கிறேனே கொஞ்சமாவது சிந்தி..!
உன் பிரிவால் நெஞ்சில் மா ரணம்,
இனியும் தொடர்ந்தால் உறுதி என் மரணம்..!
காதலைச் சொல்லவா ரத்தத்தைச் சிந்தி,
பைத்தியமாய் இருக்கிறேனே கொஞ்சமாவது சிந்தி..!
நொடிக்கவிதைகள் பகுதி 1 இங்கே:
கொசுறு:பெரிதாக ஈர்க்கும் படி இருக்காது.கொஞ்(சு)சம் தமிழில் விளையாடி பார்த்தேன்.