Thursday, August 16, 2007

இது காதல் காலமடி!!!!(பகுதி1)

கார்த்திகைப் பெருநாளன்று
தீபம் ஏற்றிக் கொண்டிருக்கிறாய் ,
ஏன் குனிந்து நிமிர்ந்து
இவ்வளவு சிரமப்படுகிறாய்
பேசாமல் நீயே வந்து
வாசலில் அமர்ந்து விடேன்!!!
(இதே போன்ற ஒரு கவிதை தபு சங்கரின் கவிதை தொகுப்பிலும் இருக்கிறது,இது எதார்த்தமாய் அமைந்ததா இல்லை அதை நான் முன் எங்கேயாவது படித்து அதன் பிரதிபலிப்பா என்று தெரியவில்லை.)
*******************************************
பஞ்சாயத்துத் தொலைக்காட்சியில்

நாடகம் பார்ப்பதெற்கென வருவாய்
உண்மையைச் சொல்
என்றைக்காவது நாடகத்தைப்
பார்த்திருக்கிறாயா?!
*******************************************
நாம் காதலிப்பது
எல்லோருக்கும்
தெரிந்து விட்டது போலும்
நீ என்னைக் கடந்து போகயில்
எல்லோரும்
என்னையேப் பார்க்கிறார்கள்!!
**********************************************
உன் வயதை
நான் மட்டும்
தானேக் கேட்டேன்
இன்று முதன் முதலாக
ஓட்டு போட வந்து
ஊருக்கேச் சொல்லி விட்டாயே!!!!

6 comments:

ப்ரியன் said...

அருமை!

நாடோடி இலக்கியன் said...

ப்ரியனின் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி!!!!

அருட்பெருங்கோ said...

காதலான காட்சிகளின் அழகான கவிதைப் பதிவு!

நாடோடி இலக்கியன் said...

வாங்க அருட்பெருங்கோ,
பிரம்ம ரிஷி பட்டம்!.நன்றி.

cheena (சீனா) said...

காதல் வெளிப்படுத்தும் விதம் அருமை. எளிமையான சொற்களில் அருமையான காதல் வெளிப்படுகிறது. நன்று

நாடோடி இலக்கியன் said...

cheena (சீனா) said...
//காதல் வெளிப்படுத்தும் விதம் அருமை. எளிமையான சொற்களில் அருமையான காதல் வெளிப்படுகிறது. நன்று//

மிக்க நன்றி திரு.சீனா அவர்களே...!
எப்போதோ பதிவிட்ட கவிதைகளையும் நிதானமாக படித்து அசத்தலான பின்னூட்டம் அளித்து என்னைப் போன்ற நிறைய பதிவர்களை உற்சாகப்படுத்தும்
உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்...!