காயச்சண்டிகையின்
வயிற்றையொத்த
கண்களெனக்கு,
உனை எத்தனை முறை
பார்த்தாலும்
என் கண்களின் பசி
அடங்குவதே இல்லை..!
நீண்டதூரம் ஓடிவந்தவனின்
இதயத்தையொத்துத்
துடிக்கும் என் இதயம்
நீ என்னை கடக்கும் நொடிகளில்..!
குழந்தைகளைக் கண்டால்
குழந்தையாகிக் கொஞ்சுமுன்னை
கொஞ்சச் சொல்லி
கெஞ்சுகிறதென் காதல்..!
Sunday, November 22, 2009
Subscribe to:
Posts (Atom)