Tuesday, October 13, 2009

கிறுக்கல்கள் 2

ஆண் புத்தி, எதார்த்தம் ....
எதேச்சையாய் குனியும்
எதிர் இருக்கை இளமை,
வேறெங்கோ பார்வையைத் திருப்பியும்
விவகாரமாய் உள்விரியும்
அக்காட்சியின் நீட்சிகள்..!

சூழ்நிலையின் தீர்மானங்கள்
நல்லவன்
அயோக்கியன்
குணவான்
முன்கோபி
நண்பன்
துரோகி
அறிவாளி
முட்டாள்
தெய்வம்
சாத்தான்
தைரியசாலி
கோழை
முரடன்
சாது
.....
......

எல்லாமே எல்லோருமே..!

Thursday, October 1, 2009

கிறுக்கல்கள்..

அர்த்தம் புரியாவிட்டாலும்
அழகாய்த்தான் இருக்கின்றன
ஆதர்ஷ கவிஞனின் கவிதையும்
அவளின் சிரிப்பும்..!

***************************
சாலையில் அடிப்பட்ட நாய்மேல்
சகஜமாய் செல்லும் வாகனங்களைப் போல
எதையோப் பார்த்து எதையோக் கேட்டு
எளிதாய் கட்டமைத்து விடுகிறோம்
கொலைச் செயலென்ற பிரஞ்ஞையற்று
அடுத்தவருக்கான பிம்பத்தை...!
******************************

வழக்கமான பேருந்து பயணத்தில்
என்னை ரசிக்கும் அவனின்
இரக்கமற்ற இயல்பான பார்வைக்காகவே
விரும்பியே மறைக்கிறேன் ஊனமான காலை...!