Sunday, November 22, 2009

நீ என்னை கடக்கும் நொடிகளில்..!

காயச்சண்டிகையின்
வயிற்றையொத்த
கண்களெனக்கு,
உனை எத்தனை முறை
பார்த்தாலும்
என் கண்களின் பசி
அடங்குவதே இல்லை..!

நீண்டதூரம் ஓடிவந்தவனின்
இதயத்தையொத்துத்
துடிக்கும் என் இதயம்
நீ என்னை கடக்கும் நொடிகளில்..!

குழந்தைகளைக் கண்டால்
குழந்தையாகிக் கொஞ்சுமுன்னை
கொஞ்சச் சொல்லி
கெஞ்சுகிறதென் காதல்..!

7 comments:

பித்தனின் வாக்கு said...

சூப்பர் அண்ணே! இப்ப என்னால இதை வர்ணிக்க முடியாது. அதுனால நல்லா இருக்கு அப்பிடின்னு சொல்லி எஸ் ஆகிடுறன். நன்றி.

சிவக்குமரன் said...

///குழந்தைகளைக் கண்டால்
குழந்தையாகிக் கொஞ்சுமுன்னை
கொஞ்சச் சொல்லி
கெஞ்சுகிறதென் காதல்..///

குழந்தைகளைக் கண்டால்
குழந்தையாகிக் கொஞ்சுமுன்னை
கெஞ்சச் சொல்லி
கொஞ்சுகிறதென் காதல்..

இப்படிக்கு,

கற்பனைகளை திருடுவோர் சங்கம்...

நாடோடி இலக்கியன் said...

நன்றி பித்தனின் வாக்கு(உங்க அலைபேசி எண் வாங்க மறந்துவிட்டேன்,மெயிலிட முடியுமா நன்பரே).

நன்றி சிவா,(பார்த்து நாட்களாச்சு ஊருக்கு வந்ததும் அடுத்த டூருக்கு கிளம்பிடுவோம் இடத்தை பிக்ஸ் பண்ணி வையுங்க நண்பா).

'பரிவை' சே.குமார் said...

காதலை காதலித்து எழுதிய அருமையான கவிதை.
நண்பரே அருமையான வரிகள்.

நினைவுகளுடன் -நிகே- said...

அருமையான கவிதை.
பாராட்டுக்கள்.

hayyram said...

நல்ல பதிவு

அன்புடன்
ராம்

www.hayyram.blogspot.com

நாடோடி இலக்கியன் said...

நன்றி சே.குமார்.

நன்றி நிகே.

நன்றி ஹேராம்.