Thursday, December 24, 2009

நான் என்பவன்...

”பிழைக்கத் தெரியாதவன்”,
”தான்தோன்றி”,
”சொல் பேச்சுக் கேளாதவன்”,
”மறைகழன்றவன்”
என்றே பலவிதங்களில்
வரையறுக்கப்படும்
நான் யாரெனில்
சிறிது பொறுங்கள்
மழை வரும்போலிருக்கிறது
மழைக்கு முன்பான
பூந்தூறல்களில் நனைவது
நினைக்கிறபோதெல்லாம் கிடைக்காது
நனைந்துவிட்டு வந்துவிடுகிறேன்..!

No comments: