Thursday, August 23, 2007

கவிதை வேண்டாமடி

காதலைச் சொல்லக்
கவிதை வேண்டுமாம்,
எழுதிப் பார்த்தேன்
கவிதை வரவில்லை
காகிதக் குப்பைதான் வந்தது,
என் காதலின் ஆழம் புரிய
கவிதை வேண்டாமடி
கசக்கி எறிந்த
காகிதங்களைப் பார் ...!

5 comments:

Thamizhmaangani said...

ஆஹா கவிதையே வேண்டாமென்று இப்படி ஒரு அழகான கவிதை எழுதிவிட்டீங்க... சூப்பர்! தொடர்ந்து எழுதுங்கள்... நல்ல சிந்தனைவளம் உங்களுக்கு!

நாடோடி இலக்கியன் said...

உங்களின் வருகைக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி தமிழ்மாங்கனி!!!!

ram said...

MUDEALA......!

Divya said...

கவிதையே வேண்டாமென ஒரு அழகான குட்டி கவிதை!
சூப்பர்!

cheena (சீனா) said...

சோகம் - கவிதையில் இழையோடுகிறது
காதலை எழுத சொற்களில்லையே என்ற சோகம் - திருப்தியடையாத மனம் - காதலைக் கூறும் கவிதை வரவில்லையே என்ற ஆதங்கம் - கவிதையாக வருகிறது