Tuesday, August 28, 2007

அழகு!!!

அச்சம்,மடம்,நாணம் போன்ற
பெண்ணுக்கே உரிய
எதுவும் இல்லை உன்னிடம்,
ஆனாலும் உன்னை எனக்குப்
பிடித்திருந்தது,
வீரம்,கல்வி,கொடை போன்ற
ஆண்மைக்கே உரிய
அத்தனையும் உண்டு என்னிடம்,
ஆனாலும் உனக்கு என்னைப்
பிடிக்கவில்லை,
நான் உன்னை நேசிக்கவும்
நீ என்னை வெறுக்கவும்
இருந்தக் காரணம் ஒன்றே- அழகு!!!

3 comments:

அருட்பெருங்கோ said...

ஒருவரை நேசிக்கவோ வெறுக்கவோ அழகு மட்டுமே காரணமாக இருக்க முடியுமா?

எனக்கப்படித் தோன்ற வில்லை :(

Divya said...

அழகுள்ளவர்களை மட்டும் தான் நேசிக்க முடியுமா என்ன??

வெளித்தோற்றத்தினால் உருவாகும் அன்பின் ஆயுள் நீள்வதில்லை!!

நாடோடி இலக்கியன் said...

அருட்பெருங்கோ and Divya ,

வருகைக்கு நன்றி!

சும்மா ஏதோ ஒரு flow-ல எழுதிட்டேங்க,மற்றபடி எனக்கே உடன்பாடில்லாத கவிதைதான் இது!