Monday, February 4, 2008

குடிகாரன் மகள்!

குடிகாரன் மகள்:
"சொன்னதையே சொல்லும் என்ன?"
கேட்டார் ஆசிரியர்,
சட்டென்று சொன்னாள் சிறுமி,
"அப்பா" என்று!

ஏற்றத் தாழ்வு:
கடும் வறட்சி,
காய்ந்து போன நிலங்கள்,
ஆங்காங்கே பசுமை,
பணக்காரத்தனத்தை பறைசாற்றியபடி
"பம்புசெட்"காரரின் வயல்!







வரப்புகள்:
பூமிப் பெண்ணைக்
கூறு போட்டு,
மானிடர்களால் போடப்பட்டத்
தையல் தழும்புகள்!





மலைகள்:
மேகக் காதலனை,

முத்தமிடக் குவிந்த
பூமிப் பெண்ணின் உதடுகள்!

5 comments:

karthikeyan said...

மலைகள் அருமையாக இருந்தது , உங்கள் கவி பயணம் தொடரட்டும்

அருட்பெருங்கோ said...

கடைசி கவிதையோட கற்பனை நல்லாருந்ததுங்க… தொடரட்டும்….

நாடோடி இலக்கியன் said...

// karthikeyan said...
மலைகள் அருமையாக இருந்தது , உங்கள் கவி பயணம் தொடரட்டும்//

வாங்க கார்த்திக்,
முதல் வருகைக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

cheena (சீனா) said...

நல்ல தேர்ந்தெடுக்கப் பட்ட படங்கள்

சொன்னதையே சொல்லும் கிளிப்பிள்ளை - குடிகார அப்பா

மானுடத்தையல்கள் - பூமிப்பெண்ணின் மீது

முத்தமிடக் குவிந்த உதடுகள்

அருமையான இயல்பான வளமான கற்பனை

நல்வாழ்த்துகள்

நாடோடி இலக்கியன் said...

thank you very much cheena (சீனா) sir.