Sunday, August 19, 2007

இது காதல் காலமடி!!!(பகுதி 3)

ஆளே இல்லாத சாலையிலும்
அனிச்சையாய் எழுப்பினேன்
மிதிவண்டி ஒலியை
அருகே உன் வீடு!!
************************************
கோலமிட்டுச் சற்றுத்

தள்ளி நின்று ரசிப்பாய்
நீ நிற்கும் கோலத்தை
என்னவென்று சொல்வது!!
*************************************
நிறைகுடமும் கூத்தாடும்

நீ சுமந்து வருகையில்!!!
*************************************
உன்னைப்

பார்த்துக்கொண்டே வந்ததில்
எதிரே இருந்த கல்லில்
இடரி விழப் போன என்னிடம்
பார்த்து வாங்க என்கிறாய்!!

1 comment:

cheena (சீனா) said...

பார்த்து வருபவனையே பார்த்து வரச் சொல்கிற இயல்பான கவலை

நிறைகுடம் கூத்தாடுவது

கோலத்தினை ரசிக்கும் கோலம்

ஆளே இல்லாத சாலையில் மணி ஒலி எழுப்புதல்

அடடா அடடா என்ன கற்பனை

காதலை அனுபவிக்கத் தெரிந்த கவிஞனையா நீர்

நல்வாழ்த்துகள்